பேரீச்சம்பழத்தின் பயன்கள்



பேரீச்சம்பழத்தில் அடங்கியுள்ள எண்ணற்ற மருத்துவ குணங்கள் உங்கல் உடலுக்கு நன்மை அளிக்கிறது.


  • உடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன.
  • தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு தம்ளர் பால் பருகி வந்தால் ரத்தம் விருத்தியடையும்.
  • தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனை வரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய பழமாகும்.
  • தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருவதால் செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண இயலும். இதில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது, இது செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. மற்றும் குடலியக்கத்தையும் சீர் செய்கிறது.
  • பேரிச்சம் பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகின்றன.
  • பேரிச்சம் பழத்தில் இருக்கும் மினரல்கள் எலும்பின் வலிமையை அதிகரிக்கிறது. எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் கூட தினசரி பேரிச்சம்பழம் சாப்பிடலாம்.
  • பேரீச்சம்பழத்தில் கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் ஈ சத்துகள் நிறைந்துள்ளன.
  • பேரிச்சம் பழத்தில் இருக்கும் இரும்பு, விட்டமின் சி, பி 6 போன்றவை இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவை சீராக்க உதவுகிறது. இதனால் இரத்த சோகை பிரச்சனைக்கு நல்ல தேர்வு காண முடியும். குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்றவை பேரீச்சம்பழத்தில் அதிகம் இருக்கின்றன.
  • ஒவ்வொரு ஆண்களுக்கும் ஆண்மை குறித்து பல சந்தேங்கள் உள்ளது. அதில் குறிப்பா ஆ‌ண்மை‌த் த‌ன்மை அதிகரிப்பதற்காக பொ‌ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம், போலி மருத்துவர்களில் பேச்சை கேட்டு கடைசியில் உயிருக்கே ஆபத்து நேரிடுகிறது.
  • தினசரி இரவில் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு சுடுதண்ணீர் அருந்தினால் மலச்சிக்கலைத் தரும் மந்தமான மலக்குடல் சுறுசுறுப்பாகி மலம் சுலபமாக வெளியேறும்.
  • நல்ல உயர்ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள்.பேரீச்சம்பழங்களை வெயிலில் நன்றாக காயவைத்து, அதனுடன் தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள்.
  • தினமும் காலை உணவு சாப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள். இதேபோல், இரவிலு‌ம் உணவு சாப்பிட்ட பின்னர் சில பேரீச்சம்பழங்களை உட்கொள்ள வேண்டும், கூடவே பசும்பாலை அருந்தினால் இன்னும் நல்லது.
  • இப்படி தொடர்ந்து இரண்டு மாதம் செய்து வந்தால் ஆண்மை ச‌க்‌தி பெருகி‌ விடும்.எந்த பக்கவிளைவுகளும் இல்லாத இந்த இயற்கை முறையை கடைபிடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.
  • இது, சத்துகள் நிறைந்த ஒரு பெட்டகமாகவே திகழ்கிறது. குறிப்பாக, இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் பேரீச்சம்பழம் பெண்களுக்கு மிகவும் முக்கியமானது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பழநி மலை முருகன்

Types of triangle

சங்குப் பூ