இடுகைகள்

அக்டோபர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாட்டு வெல்லப்பாகு

படம்
*நாட்டு வெல்லப்பாகுவில் இருக்கும் எண்ணில் அடங்கா சக்திகள் இதோ…* நாட்டுச்சர்க்கரை, பனைவெல்லம், அச்சுவெல்லம், கருப்பட்டி போன்ற நம் பாரம்பர்ய இனிப்புச் சுவையூட்டிகளில் சத்துகளும் மருத்துவக் குணங்களும் “வெல்லத்தின் முழுமையான பலன்கள் கிடைக்க வேண்டும் என்றால், வெல்லப்பாகு நிலைதான் மிகச் சிறந்தது. செயற்கையான வேதிப்பொருள்கள் சேர்க்கப்படாத நிலையில் இருக்கும் வெல்லப்பாகில் கூடுதல் மருத்துவப் பயன்கள் கிடைக்கும். சத்துகள் கால்சியம், மக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம், தாமிரம், இருப்புச்சத்து, பாஸ்பரஸ், குரோமியம், கோபால்ட் மற்றும் சோடியம் போன்ற உடலுக்குத் தேவையான அத்தியாவசிய தாதுச் சத்துக்கள் உள்ளன. மேலும், வைட்டமின் பி 3, நியாசின் (Niacin), வைட்டமின் பி 6, தயாமின், ரிபோஃப்ளேவின் ஆகியவையும் உள்ளன. இதில் அதிக அளவில் கார்போஹைட்ரேட்டும், குறைந்தளவு கொழுப்புச்சத்து மற்றும் நார்ச்சத்தும் உள்ளன. செரிமானம் சீராகும் உமிழ்நீரைப் பெருக்கி, சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானமாக உதவும். இது, உணவுக்குழாய், வயிறு என உடல் உறுப்புகளையும் சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது. மலச்சிக்கல் போக்கும் இதில் உள்ள ஆன்ட

வெற்றிலை

படம்
அறிவோம் வெற்றிலையின் குணங்கள்! * வெற்றிலையுடன் மிளகை அரைத்து பாக்கு அளவு உட்கொண்டு, பின் வெந்நீர் அருந்தினால் எல்லா விஷங்களும் முறியும். * உடலில் அதிக வெப்பத்தையும், வலியையும் நீக்கும் குணம் வெற்றிலைக்கு உண்டு. * வெற்றிலையுடன் சிறிது உப்பை மடித்துச் சாப்பிட்டால் வயிற்றில் ஏற்படும் குத்து வலி நீங்கி விடும். * வெற்றிலைச் சாறும் தேனும் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து தினமும் இரு வேளை அருந்திவர உடல் பலவீனமும், நரம்புத்தளர்ச்சியும் நீங்கும். * வெற்றிலையுடன் சம அளவு ஓமம் சேர்த்து இடித்து பிழிந்து அச்சாற்றை தேன் கலந்து பருகி வந்தால் வயிற்றுப்பொருமலுடன் கூடிய வயிற்றுப் போக்கு நிற்கும். * கடுமையான தலைவலி இருந்தால் வெற்றிலையை அரைத்து பத்துப் போட்டால் தலைவலி நீங்கிவிடும். * வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்து கட்ட குழந்தை பெற்ற தாய்க்கு அதிகமாக பால் சுரக்கும்.

மருதாணி மகத்துவம்!

படம்
மருதாணி மகத்துவம்! மருதாணி இலைகளைப் பறித்து, வீடே மணக்கும் அளவுக்கு அம்மியில் அரைத்து, இரவு சாப்பிட்டு முடித்தவுடன் கை, கால் விரல்களுக்குத் தொப்பி போட்டு, தூங்கி எழுந்ததும் கைகளைக் கழுவி, யாருக்கு நன்றாக சிவந்துள்ளது என ஒப்பிட்டு மகிழ்ந்த காலம், இன்றைய  குழந்தைகளுக்கு வாய்க்கவில்லை. கைகள் நொடியில் சிவக்க, மெஹந்தி கோனும், நெடுநாள் நீடிக்க டாட்டூவும்தான் அழகு, ஸ்டைல் என்று நினைக்கின்றனர். இவை, இருக்கும் அழகையும் கெடுத்து, சரும நோய்க்கும் வித்திடும். ஆனால், இயற்கையின் கொடையான மருதாணியைப் பயன்படுத்திவந்தால், அழகும் ஆரோக்கியமும் நிரந்தரம். மருத்துவப் பலன்கள்: மருதாணியின் இலை, பூ, பட்டை என, அனைத்துப் பகுதிகளுமே மருத்துவக் குணம் வாய்ந்தவை. வாதக்குடைச்சல், தலைவலி, கைகால் வலி, எரிச்சல், அலர்ஜி போன்ற பிரச்னைகளுக்கு, மருதாணி நல்ல தீர்வைத் தரும். சருமப் பிரச்னை உள்ளவர்கள் அதிகமாகப் பயன்படுத்தலாம். மருதாணி இலையை அரைத்து, உள்ளங்கை, உள்ளங்காலில் தேய்க்கலாம். கண் எரிச்சல், கை,கால் எரிச்சல் குணமடையும்.  நகப்புண், நகச்சுத்திக்கு மருதாணி இலைகளை அரைத்து, அதன் மேல் கட்டினால், விரைவில் குணமாகு

அறிந்தும் அறியாததும் 10

!  நமது உடலில் சுமாா்  3 கோடி வியா்வை சுரப்பிகள்  உள்ளன. !  ஒரு  மைல் தூரத்தைக் கடக்க நத்தைகள் 33 மணி நேரம்  எடுத்துக்  கொள்கிறது. !  மிக நீண்ட ஆயுள் வாழும் உயிாினம்  ஆமை. ! விலங்குகளில் அதிக அறிவு படைத்தது டால்பின். !  நாளுக்கு நாள் அதிக உயரம்  வளரும்  மரம்   மூங்கில். !  தண்ணீா் குடிக்காத விலங்குகள்  எலி & கங்காரு. !   சூாியன் ஒளி  பூமியில் வந்து சேர எட்டரை நிமிடங்கள் ஆகும். !   பூச்சியினங்களி்ல் அதிக அறிவுள்ள  உயிா் எறும்பு. !   கண்ணீா் புகைக்குண்டால் பாதிக்கப்படாத ஒரே மிருகம்  குதிரை. !   மயிலுக்கு 150 இறகுகள் உண்டு. காலை & மாலை வேளைகளில் மயில் இரையைத்  தேடும்.

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை

படம்
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை......... 👇👇👇 இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது வாழ்வென்பது உயிர் உள்ளவரை தேவைக்கு செலவிடு அனுபவிக்க தகுந்தன அனுபவி இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே உயிர் பிரிய தான் வாழ்வு...... ஒரு நாள் பிரியும்... சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும். உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே உன் குழந்தைகளை பேணு அவர்களிடம் அன்பாய் இரு அவ்வப்போது பரிசுகள் அளி அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே அடிமையாகவும் ஆகாதே பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள் அதைப்போல பெற்றோரை மதிக்காத குழந்தைகள் உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம் உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக் கொள்ளலாம் பொறுத்
படம்
வீட்டுக்கு ஒரு பப்பாளி... இனி யாரும் இல்லை சீக்காளி! ‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே...’ என்கிற பழமொழியை மாற்றி  ''நான் வரும் பின்னே.. என் தொப்பை வரும் முன்னே’’ என்று சொல்லி கிண்டல் பண்றாங்க.. தொந்தியை குறைக்க தந்தி வேகத்தில் ஒருவழி சொல்லுங்க.'' நாட்டில் உள்ள அனேகம் குண்டர்களின் ஒட்டுமொத்த வேண்டுக்கோள் இதுவாகத்தான் இருக்கும். அதற்கு மருத்துவர் சொல்லும் ஒரே தீர்வு ‘பப்பாளி சாப்பிடுங்க.’ 'அய்யா! எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு 7 வருஷமாச்சு. இன்னும் வயித்தில ஒரு புழு பூச்சியும் தங்கல. குழந்தைப்பேறு கிடைக்க ஒரு வழி சொல்லுங்க' என்று சித்த மருத்துவரிடம் உருகும் தம்பதியருக்கு அந்த மருத்துவர் சொல்லும் ஒரே பதில், ‘பப்பாளி சாப்பிடுங்க.’ 'சிறுநீரகத்தில் கல் உண்டாயிருக்கு வலி தாங்க முடியல, அறுவை சிகிச்சை செய்யவும் பயமா இருக்கு. அந்தக் கல்லைக் கரைக்க ஒருவழி சொல்லுங்க'ன்னு கேளுங்க. அதுக்கும் 'பப்பாளி சாப்பிடுங்க'னு பதில் வரும். வீட்டுப் புறக்கடையில் மட்டுமே ‘பவ்சு’ காட்டிய பப்பாளி மரங்கள் இன்று பல ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டும் வருகிறது. இன்ற

கைப்பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும்...?

படம்
கைப்பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும்...?  1. அலைபேசியை இடதுபுற காதில் வைத்து பேசுவது தான் நல்லது. 2. சார்ஜ் ஆகிக் கொண்டிருக்கும் போது அழைப்பு வந்தால் அப்படியே எடுத்து பேசுதல் கூடாது. அதுவே சைனா மொபைல் என்றால் ஆபத்து அருகில். 3. மொபைலில் கடைசி ஒரு புள்ளி சார்ஜ் இருக்கும் போது பேசுவது கூடாது. ஏனென்றால் அப்போதுதான் ரேடியேசன் அதிகம் இருக்கும். கதிர்வீச்சு பாதிப்பு மிகுதியாக இருக்கும். 4. ஸ்பீக்கரை ஆன் செய்து வைத்து விட்டு மொபைலில் பேசுவது செவிப்பறையை சேதம் ஏற்படுத்தி விடும். 5. மொபைலில் அழைப்பு வரும் போது தான்ரேடியேஷனும் இருக்கும்.ரிங் ஒசையை விட வைப்ரேட் மோடில் வைத்து இருப்பது அதிக ரேடியேஷனை வெளிப்படுத்தும். சைலன்ட் மோடும் ஆபத்து விளைக்க கூடியது தான். 6. சட்டைப் பையில் வைப்பதை விட பேன்ட் பாக்கெட்டில் மொபைலை வைத்துக் கொள்ள வேண்டும். 7. நீங்கள் உபயோகிக்கும் மொபைலில் பேசும் போது காதின் பக்கம் சூடாகிக் கொண்டே போனால் அந்த மொபைலை கை கழுவி விடுதல் நல்லது. 8. ஸ்மார்ட் மொபைலில் ரேடியேஷன் குறைப்பதற்கான கருவிகள் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும். 9. குழந்தைகளிடம் மொபைலை கொடுத்து ப

முதுகுவலிக்கு எளிய உடற்பயிற்சிகள்

படம்
முதுகுவலிக்கு எளிய உடற்பயிற்சிகள்  முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் இந்த எளிய பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக நிவாரணம் அடைவதை காணலாம். முதலில் விரிப்பில் அமர்ந்து கால்களை முன்புறமாக நீட்டிக்கொள்ள வேண்டும்.  சுவாசத்தை இயல்பான நிலையில் வைத்து முன்னால் குனிந்து உங்கள் கைகளால் கால்களின் கணுக்காலை தொட வேண்டும். அவ்வாறு குனியும் போது கால் முட்டுகள் வளைய கூடாது.  இந்த நிலையில் 10 முதல் 20 வினாடிகள் இருக்க வேண்டும். 5 வினாடிகள் ஒய்வு எடுத்த பின்னர் மறுமுறை செய்யவும்.  பின்னர் படத்தில் உள்ளது போல் முட்டியை வளைத்து வைத்து கொண்டு கால் கணுக்கால்களை தொட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் முதுகெலும்பு, தோள்கள் நன்கு வலிமை பெறுகிறது.  மேலும் செரிமானத்தை தூண்டுகிறது.  உங்கள் கால்விரல்கள் தொடும் முயற்சியில் ஈடுபடும் போது முதுகுத்தண்டில் அதிக வலி இருந்தால் இந்த பயிற்சியை செய்ய கூடாது.  மேலும் இந்த பயிற்சியை செய்யும் போது முதுகிற்கு அதிக அழுத்தம் கொடுக்க கூடாது.